திருப்பூர், ஆக. 17- திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளி யன்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து மார்பகப் புற்றுநோய் துறை மருத்துவர் அன்புச்செல்வன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது உலகி லேயே இந்தியாவில்தான் அதிகமானோர் மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 10 நிமிடத்திற்கு இரு வர் பாதிக்கப்படுவதாகவும், 22 பேரில் ஒருவர் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படு வதாகவும் அவர் தெரிவித்தார்.