அவிநாசி, மே 14 - அவிநாசி பேரூராட்சி பகுதியில் தூய்மைப் பணியாள ருக்கு குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. அவிநாசி பேரூராட்சி பகுதியில் மொத்தம் 18 வார்டு கள் உள்ளது. இங்கு தூய்மைப் பணியாளர்கள் தினசரி தள்ளு வண்டிகள் மூலமாக குப்பைகளை சேகரித்து வருகின்ற னர். இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பேட்டரி வாக னங்கள் அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் பணிகளை விரைவில் முடிக்க முடியுமென துப்புரவுப் பணியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இதேபோல் அவிநாசியின் 31 ஊராட்சிப் பகுதி களிலும் பேட்டரி வாகனம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.