tamilnadu

வெளி மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புக பனியன் சங்கம் கோரிக்கை

திருப்பூர், மே. 9 - சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் வெளி மாநிலத் தொழி லாளர்களை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திருப்பூர் அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.  இதுதொடர்பாக வெள்ளி யன்று அனைத்து சங்க நிர்வா கிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஐ.என்.டி.யு.சி தலைவர் அ. பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி செயலாளர் என். சேகர் உட் பட சங்க நிர்வாகிகள் பலர் பங் கேற்றனர். இக்கூட்டத்தைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வா கிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளரைச் சந்தித்து அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, புது திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங் காவில் பணியாற்றி வந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங் களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் காவல் துறையினர் தொழிலா ளர்களை சமரசம் செய்து வைத்த தோடு சில தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதவிர கடந்த சில நாட்க ளாக திருப்பூரில் ஆங்காங்கே வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி கூட்டம் கூடி முழக்கம் எழுப் புவது, ரயில் நிலையத்திற்கு படை யெடுப்பது ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.  இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர் பிரச்சினையை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சி னையாக அணுகுவது சரியல்ல என்று தொழிற்சங்கங்கள் கருது கின்றன. குறிப்பாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 45 நாட்கள் ஆன நிலையில் தொழி லாளர்கள் பெரும்பாலானோர் வேலை இல்லாமலும் வருமானம் இல்லாமலும்  உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை கிடைக் காமலும் தாங்கள் தங்கியிருக்கும் அறைகள்,  வீடுகளுக்கு வாடகை கொடுக்க முடியாமலும் பெரும் சிரமப்படுவதோடு உளவியல் சிக்கலுக்கும் ஆளாகி வருகின்ற னர்.

அவர்களுக்கு அரசு அறி வித்த உணவு மற்றும் நிவாரண உதவிகள் ஓரளவே போய்ச் சேர்ந் துள்ளன. இதர அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவ னங்கள் அளித்த உதவிகளும் அவர்களுக்கு ஓரளவே உதவி இருக்கின்றன. ஏராளமான தொழி லாளர்கள் பாதுகாப்பு இல்லா மலும், நிச்சயமற்ற சூழலிலும் சிக்கி இருப்பதாக உணருகின்றனர். இச்சூழ்நிலையில் அவர்களது பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண்பது  அவசியமானது என கருதுகிறோம்.  கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு ஊரடங்கு பிறப்பிக்கப் படுவதாக தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற் றியபோது, நாடு முழுவதும் பல் வேறு மாநிலங்களில் அந்தந்த தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை அவர்கள் வேலை செய்யும் நிறு வன உரிமையாளர்கள் ஊதியம் மற்றும் உணவு கொடுத்து பாது காக்கும்படி கேட்டுக் கொண் டார்.

எனினும், மிகப்பெரும் பான்மையான நிறுவனங்கள் பிரதமர் மோடியின் வேண்டு கோளுக்குச் செவி சாய்க்கவில்லை என்பதை வேதனையோடு தெரி வித்துக் கொள்கிறோம். எனவே நிராதரவான நிலையில் நெருக் கடியை சந்தித்து வரும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அரசு நிர்வாகத்தின் மீதும் தொழிற் சாலை உரிமையாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். இச்சூழ்நிலையில்தான் கடந்த சில நாட்களாக அத்தொழி லாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று தவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் அவர்களை கணக் கெடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் பட்டி யலை தயாரித்து வைத்திருப் பதாகவும் அரசின் உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் அதற் கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகளை இயக்கு வதற்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இதில் 50 சதவிகிதம் தொழிலாளர்களுடன் தொழிற் சாலைகளை இயக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றாலும் மற்ற பகுதி தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலைகளை இயக்குவது பாதிக்கப்படாது என கருது கிறோம்.  அரசு நிர்வாகமும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக காவல் துறையின் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர்களை அணுகுவ தைக் கைவிட வேண்டும். இது இப்பிரச்சனையை திசை திருப் பவும் விபரீதமான விளைவுக ளுக்குமே இட்டுச் செல்லும். எனவே சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர் களை அனுப்பி வைப்பதற்குத் தேவையான பயண ஏற்பாடுகளை அரசே பொறுப்பேற்று உடனடி யாக செய்து தர வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியு றுத்துகின்றன. ஏற்கெனவே பட் டியல் தயாரித்து வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில், அவர்களது பயண ஏற்பாடுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

இதுதவிர இங்கே தங்கியிருந்து வேலை செய்ய விரும்பும் தொழிலாளர் களை பயன்படுத்தி தொழிற் சாலையை நடத்தலாம். அவர்க ளுக்கும் உரிய உணவு, நிவா ரணம் கிடைப்பதையும் அரசு நிர்வாகம் உறுதிப்படுத்த வேண் டும் என்று அனைத்துத் தொழிற் சங்கங்கள் வலியுறுத்திக் கேட் டுக் கொண்டுள்ளன, இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ஏற்கனவே சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளி மாநிலத் தொழிலாளர் களின் பட்டியல் தயார் நிலை யில் உள்ளதாகவும் அதன்படி மொத்தம் சுமார் 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அரசு அனுமதியளித்தால் அவர் களை உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதாகவும் தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.