உடுமலை, மார்ச் 1- உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், ராயல்ஸ் அரிமா சங்கம், சுற்றுச்சூழல் சங் கம் மற்றும் கலிலியோ அறிவியல் கழகத் தின் சார்பில் அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் அறிவியல் கலை இலக்கி யம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு உடுமலை ஆர்.கே.ஆர் கல்வியியல் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் கு.சி.மணி வரவேற்றார். சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்ட இஸ்ரோ செயற்கைக் கோள் மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அறிவி யல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகின்ற பல்வேறு முன்னேற்றங்கள் பற்றியும், கலாம் கண்ட கனவை நாம் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி னார். அதனைத்தொடர்ந்து பூமியில் மக்கள் வாழ்வது போல வேறு கிரகத்தில் வாழ முடியுமா? பறக்கும் தட்டு என்பது உண்மையா? பிளாக் ஹோல் கருப்பாக இருக்கும் எப்படி அதை நிழல் படம் எடுக்க முடியும்? உங்களுக்கான அறிவியல் விதை எங்கே முளைத்தது? தமிழ் நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க முடியுமா ? உங்களைப்போல ஆக நான் என்ன படிக்க வேண்டும்? விளையாட்டுத் துறையில் சிறப்பாக இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டைப் போல அறிவியல் துறையிலும் சிறப்பாக இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரலாமா? நியூட்ரினோ மையம் தேவையான ஒன்றா? உங்கள் கருத்து என்ன போன்ற மாணாக்கர்களின் பல்வேறு வகையான அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் ரவி ஆனந்த் உடுமலை அரிமா சங்க தலைவர் பன்னீர்செல்வம் உடுமலை சுற்றுச்சூழல் சங்க சசிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்ற சிறந்த தலைமையாசிரியர்களுக்கான விருது, ஆசிரியர்கள் மற்றும் இளம் ஆசிரியர்க ளுக்கான விருது, மாணாக்கர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்களுக்கான விருது, சிறந்த சமூக அமைப்புகளுக்கான விருது. சிறந்த நூலுக்கான விருது, அறிவியல் விழிப்புணர் வில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக் க்கான விருது ஆகிய தலைப்புகளில் 40 சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகளை மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப் பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார்.