tamilnadu

அவிநாசி: ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்ட சாலைப்பணி உடனடியாகத் துவங்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு

அவிநாசி, செப்.14- அவிநாசி அருகே நிறுத்தி வைக்கப் பட்ட சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்குவது என அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப் பட்டது. அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மாண்டம்பாளையம், கருக்கம் பாளையம், கருமாபாளையம் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில், மடத்துப்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் இருந்து செம்மாண்டம் பாளையத்திற்கு செல்லும் சாலையின் வளைவுப்பகுதியை நேராக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையடுத்து சாலையை சீரமைப் பதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்தாண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதில் நில அளவீடு முடிவடைந்து, பணிக்கான டெண்டரும் விடப்பட்டது. பணி துவங்க இருந்த நிலையில், ஒரு தரப்பினர் தற்போது திட்டமிட்டுள்ள படி சாலை அமைத்தால் மழைநீர் தடைபட்டு, அங்குள்ள மயானத்துக் குள் புகுந்து விடும் என  எதிர்ப்புத் தெரி வித்தனர். இதனால், சாலை அமைக் கும் பணி நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் இரு தரப்பு மக்களி டையே அவிநாசி வட்டாட்சியர் அலு வலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலையையே விரிவாக்குவது. வளைவுப் பகுதிகளில் வேகத்தடை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும்,  செப். 18ஆம் தேதி பொதுமக்களை நேரடி யாக சந்தித்த பிறகு உடனடியாக பணி யைத் தொடங்குவது எனவும் முடிவு  செய்யப்பட்டது.