tamilnadu

அவிநாசி ஜமாபந்தி: குறைந்தளவு மனுக்களுக்கு மட்டுமே தீர்வு

அவிநாசி, ஜூன் 21- அவிநாசி தாலுகா அலு வலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் குறைந் தளவு மனுக்களுக்கு மட்டுமே உடனடி தீர்வு காணப்பட்டது.   அவிநாசி தாலுகாவில் ஜமாபந்தி 13ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை  நடைபெற்றது. இந்த ஜமா பந்தியில் 1,041 மனுக்கள்  பெறப்பட்டன. இதில், பட்டா மாறுதல் கேட்டு 326,  முதியோர் உதவித்தொகை கேட்டு 298, வீட்டுமனைப் பட்டா கேட்டு 279 மனுக் களை பொதுமக்கள்  அளித் தனர்.  மேலும், ரேசன் கார்டு  மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவித் தொகை, ஆக்கிர மிப்பு அகற்றம்,நில அளவை, வாரிசு சான்று உள்ளிட்ட மனுக்கள் பொது மக்கள் அளித்தனர். இதில்  29 மனுக்களுக்கு மட்டுமே  உடனடி தீர்வு காணப் பட்டது. எஞ்சிய 1,041 மனுக் கள் சம்பந்தப்பட்ட துறை யின் நடவடிக்கைக்கு உட் படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக,இந்த ஜமா பந்தி மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் மகா ராஜன் தலைமையில், வட் டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் உட்பட அலு வலர்கள் முன்னிலை நடை பெற்றது.