அவிநாசி, அக். 28- அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுா ரிக்கு தேசிய தர நிர்ணயம் பெறுவதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆசிரியர்களுக் கான கருத்தரங்கு நடைபெற்றது. அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரி கடந்த இரு ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. தற்போது, பிரம்மாண்ட மான புதிய கட்டடத்தில், 800க்கும் மேற் பட்ட மாணவர்களுடன் செயல்பட்டு வரு கிறது.இக்கல்லுாரிக்கு தேசிய தர சான்று பெறுவதற்கான முயற்சியில், கல் லுாரி பேராசிரியர்கள் முனைப்புக்காட்ட துவங்கியுள்ளனர். அதன் முன்னோட்ட மாக, சுய தர மதிப்பீட்டு அமைப்பின் சார் பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. முதல் வர் (பொ) குலசேகரன் தலைமை வகித் தார். காயத்ரி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை ஏ.வி.சி., கல்லூரி (தன்னாட்சி) விலங்கியல் மற்றும் வன உயிரியியல் துறை பேராசிரியர் மூர்த்தி பங்கேற்றார். நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் பாலமுரு கன் பேசுகையில், ‘‘கல்லுாரியின் தரத்தை உயர்த்துவதன் மூலம், கல்லுாரியின் உள் கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற முடியும். வருங்காலங்களில், அதிகளவு மாணவர்களுக்கு, தரமான கல்வி வழங்கவும், அவர்களின் தரத்தை உயர்த்தவும் வழிவகை ஏற்படும்,’’ என்றார். இக்கருத்தரங்கில் வணிகவியல், வணிக வியல் (சர்வதேச வணிகம்), வேதியியல், இயற்பியல், பொருளியல், கணிதம், தமிழ், ஆங்கிலம், கம்ப்யூட்டர் அறிவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்கள் பங்கேற்றனர்.