tamilnadu

வழக்கறிஞர் இருவர் மீது தாக்குதல்: காவல் துறையினர் விசாரணை

திருப்பூர், ஜூலை 26- திருப்பூரில் வழக்கறிஞரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ரோடு எம்.ஜி புதூ ரைச் சேர்ந்தவர் சுகன்யா (38).  வழக்கறிஞரான இவர்  கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று, தனது மூத்த வழக்கறிஞரான ரவியுடன் அவிநாசியில் உள்ள காவல்நிலையத்திற்கு காரில் சென்று கொண்டி ருந்தார்.

அப்போது திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், அவ்வழி யாக மற்றொரு காரில் வந்த இருவர் வழித்தகராறில் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதில், சுகன்யா மற்றும் ரவி ஆகிய இருவரையும் தாக்கிய அந்த நபர்கள் கொலை மிரட்டலும் விடுத்த தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சுகன்யா காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு காவல் துறையி னர் வெள்ளியங்காட்டை சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகி மாரிமுத்து மற்றும் ஜேக்கப் ஹெரால்ட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

;