tamilnadu

செல்போன் திருடிய இருவர் கைது

திருப்பூர்,ஜன.01- திருப்பூர் பேக்கரியில் தேநீர் குடிக்க சென்ற வரிடம் செல்போன் திருடிய 2 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் (35).இவர்,  திங்களன்று திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், அவர் திருப்பூர் எஸ்.ஏ.பி சந்திப்பு அருகே உள்ள பேக்கரியில் தேநீர் குடிக்க சென்றுள்ளார்.அப்போது அவருடைய செல் போன் திருடு போனது தெரியவந்தது. இதனை யடுத்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர் பாளையம் காவல் துறையினர் விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில் பூலுவப்பட்டி சோதனை சாவடி யில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த, சந்தேகத்திற்கு இடமான 2 பேரை விசாரணை செய்ததில், அண்ணாநகரை சேர்ந்த  சக்திவேல்(24), கோபிநாத்(21) என்பதும், இருவரும் எஸ்.பி.ஏ சந்திப்பு பகுதியில் ஜானின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.இதையடுத்து இருவரையும் காவல் துறை யினர் கைது செய்தனர்.

;