திருப்பூர், ஆக. 31 - பெண்குழந்தைகள் விருதிற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவ தாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக்கு றிப்பில் அவர் தெரிவித்துள் ளதாவது, தேசியப் பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ஆம் தேதி யன்று தமிழக அரசால் 2020-ம் ஆண்டு பெண் குழந் தைகளுக்கான விருது வழங் கப்பட உள்ளது.
இவ்விரு திற்கான பாராட்டுப் பத்தி ரம் மற்றும் ரூ.1 லட்சத்திற் கான காசோலை இவ்விருது பெருவோருக்கு வழங்கப் படும். பெண் கல்வி, பெண் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைத் திரும ணத்தைத் தடுத்தல், தற் காப்புக் கலையில் மாநில அளவிலான சான்றுகள் பெற்றிருத்தல், விளையாட் டில் மாநில அளவில் முதன்மை பெற்றிருத்தல், சமூக அவலங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காண் பதற்கான புத்தகங்கள் மற் றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருத்தல், போன் றவற்றில் சிறப்புடன் செயல் புரிந்த 5 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட தமிழ கத்தைச் சார்ந்தவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர்.
இவர்கள் தங்களின் விவரங்களை தங்கள் சாத னைகளின் சான்றுகளோடு ஒரு பக்கத்திற்கு மிகாத ஆதா ரங்களுடன் கூடிய முன் மொழிவுப் படிவத்தை திருப் பூர் மாவட்ட சமூக நல அலு வலகத்திற்கு அக்டோ பர் 30க் -குள் விண்ணப் பிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள் ளார்.