tamilnadu

சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பூர், ஜன. 28- திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியி டங்களை நிரப்பிட விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.   திருப்பூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணி நியமனத்திற்கு விண்ணப் பிக்கத் தேவையான தகுதி கள், சாலை ஆய்வாளர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற் றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை https://tiruppur.nic.in/ இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இப்ப ணியிடத்திற்கான விண் ணப்பங்களை மேற்படி இணையதளத்தில் பதிவி றக்கம் செய்து கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல் லது மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சிப் பிரிவு),  மாவட்ட ஆட்சியரகம், (அறை எண்: 310), பல்லடம் ரோடு, திருப்பூர் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ பிப்.22 (சனி) மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண் டும் என மாவட்ட ஆட்சி யர் அலுவலக செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

;