அவிநாசி, அக்.4- அவிநாசி அருகே தண்டுக்காரம்பாளை யத்தில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே உள்ள தண்டுக்காரன்பாளையம் சாமிக்க வுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனி யம்மாள் (84). இவர் தனது மகன் ரங்கசாமி யுடன் வசிந்த நிலையில், தோட்டத்திற்குள் இருக்கும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கால் தவறி தோட்டத்துக் கிணற்றுக்குள் விழுந்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவ லறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், 60 அடி ஆழ முள்ள கிணற்றுக்குள் இருந்து நீண்ட நேரம் போராடி மூதாட்டியை சடலமாக மீட்டனர். இதுகுறித்து சேவூர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.