தாராபுரம், ஜூலை 17- தாராபுரம் அடுத்த உப்பாறு அணை பகுதியில் விமானப் படையினர் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர். இது அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சூலூர் விமானப்படையில் இருந்து பயிற்சி விமானிகள் ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தாரா புரம் அடுத்துள்ள உப்பாறு அணையில் கோவை விமானப் படை தளத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் 5 வீரர்கள் காலை 11 மணியளவில் தரை இறங்கினார்கள். தரை இறங்கிய பிறகு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. நான்கு விமானப்படை வீரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த நவீன ரீசிவர் கருவி மூலம் அணையின் நடுப் பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர். மேலும் துப்பாக்கி கள் மூலம் தீவிரவாத தடுப்பு ஒத்திகைகளை மேற்கொண் டனர். இவ்வாறு அணைப்பகுதியில் பல்வேறு சோத னைகளை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்து மக்கள் அணைப் பகுதியில் குவிய தொடங்கி னார்கள். ஆனால் வீரர்கள் பயிற்சி பகுதிக்கு வரக்கூடாது என எச்சரித்தனர். தொடர்ந்து பல்வேறு சோதனை களை மேற்கொண்டபிறகு திரும்பி சென்ற ஹெலிகாப் டருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலி காப்டர் மீண்டும் வந்து வீரர்களை ஏற்றி சென்றது. இதுகுறித்து உப்பாறு அணையில் உள்ள அதிகாரி களிடம் கேட்டபோது, சூலூர் விமானப்படையில் இருந்து பயிற்சி செய்வதற்காக எந்த எழுத்துபூர்வமான அனுமதியும் பெறவில்லை. மேலும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் வந்துள்ளனர் என தெரிவித்தனர்.