திருப்பூர், பிப். 3 – மத்திய அரசு எல்ஐசி பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதாக பட்ஜெட் டில் அறிவித்திருப்பதன் மூலம் பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பது போன்ற செயலில் ஈடு பட்டிருக்கிறது என கண்டனம் தெரிவித்து திருப்பூரில் பிஎஸ்என் எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருப்பூர் பிஎஸ்என்எல் தொலை பேசி நிலைய பிரதான அலுவலக நுழைவாயிலில் திங்களன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் நாடு முழுவதும் விஆர்எஸ்இல் சென்ற சுமார் 80 ஆயிரம் பேருக்கு இரண்டு மாதம் சம்பளம் வர வில்லை. மேலும் விஆர்எஸ் படி எந்தவிதமான கிராஜுவட்டி உட் பட நிதிப்பலன்களைத் தராததைக் கண்டித்தும், எல்ஐசி நிறுவனத்தை விற்பனை செய்வதைக் கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு வரு டம் சம்பளம் தராமல் நிறுத்தி வைத் திருப்பதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் சௌந்திரபாண்டியன் தலைமை ஏற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர், மாநில உதவிச் செயலாளர் என்.சுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.