tamilnadu

கொரோனா தடுப்பு பணியில் முன்களத்தில் செயல்படும் தூய்மைப் பணியாளர்களை பாதுகாத்திடுக - சிபிஎம்

திருப்பூர், அக். 13 - கொரோனா தடுப்பு மற்றும் மீட்புப் பணி யில் முன்வரிசையில் இருந்து செயல்படும் தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாப்ப தற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகே யனுக்கு செவ்வாயன்று அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 24 ஆம் தேதி கொரோனா ஊரடங்கு அறி விக்கப்பட்டதிலிருந்து தூய்மைப் பணியா ளர்கள் கொரோனா நோய்த்  தொற்றுத் தடுப்புப் பணியில் முன்களத்தில் நின்று பணி யாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு உரிய பாதுகாப்பு சாதனங்கள், அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வேண்டும். அனைவ ருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகள் மூலம் ஆரம்பத்தில் சில பணிகள் செய்து தரப்பட்டாலும், தற்போது அவை எதுவும் நடைமுறையில் இல்லை என்பது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. கொரோனா ஊரடங்கில் சில மாதங்க ளாக தொழில்கள் முடங்கி வேலையிழப்பு, வருமான இழப்பை தொழிலாளர்கள் சந் தித்தனர். பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு தனியார் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், பணி யாளர்கள் பாதுகாப்புடன் இருக்க அரசும், நிறுவனங்களும் அறிவுறுத்துகின்றன.

ஆனால் பல நிறுவனங்களில் ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மக்களைப் பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகளில், கொரோனா தடுப்புப் பணியில் ஆயிரக்கணக்கான தூய் மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். நோய் பாதிப்புக்கு உள்ளானோர் வீடு மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது போன்ற  தூய்மைப் பணி யில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பணியின் மூலம் தொற்றுப் பரவல் பெருமளவு தடுக் கப்படுகிறது.  தொற்றுப் பரவலின் தொடக்க நாட்களில் சிஐடியு சார்பில் அனைத்துப் பேரூராட்சி, ஊராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து முறையிட்டதன் பலனாக, தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக்  குடிநீர், சோப், கிருமி நாசினி, கையுரை உள்ளிட்ட உதவிப் பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டன. அத்துடன் மூன்று தினங்களுக்கு மருத்துவப் பரி சோதனை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட் டன.

ஆனால், தற்போது இவர்களுக்கு மருத் துவப் பரிசோதனை சரிவர செய்யப்படுவ தில்லை. தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலையை அறியும் பரிசோதனை கூட நடத்தப்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க், வைட்டமின் சி, மல்டி விட்டமின் மாத்திரைகள் சரிவர தரப்படுவதில்லை. தூய்மைப்  பணியாளர்க ளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டும், சில உள்ளாட்சி அமைப்பு களில் உள்ள அதிகாரிகள் அலட்சியத்துடன் இருக்கின்றனர். பரிசோதனை முடிவுகளை யும் உடனுக்குடன் வழங்குவதில்லை. எனவே, முன்கள தூய்மைப் பணியா ளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்வதாக அக்கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.