tamilnadu

img

விவசாயிகள் கோரிக்கைகள் ஏற்பு- காத்திருப்பு போராட்டம் நிறைவு

திருப்பூர், நவ. 3– திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம், அவர் களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் ஆறு நாட்கள் நீடித்த நிலையில் முடிவுக்கு வந் தது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத் தின் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் கவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள 765 கிலோ வாட் உயர்மின் கோபுரம் திட் டத்தை எதிர்த்தும், இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், இத்திட்டத்தால் பாதிக்கப் பட்ட விவசாயிகள் வழக்குத் தாக்கல் செய் துள்ளனர். இந்த வழக்குகள் வரும் நவம்பர் 27 ஆம் தேதியன்று இறுதி விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, இத்திட்டப் பணிக ளைத் தொடங்குவதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முன் நுழைவு அனுமதி வழங்கி யுள்ளார். இந்த முன்அனுமதி கொடுக்கக் கூடாது என்றும், தனியார் கார்ப்பரேட் நிறு வனமான சுஸ்லான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன் நுழைவு அனுமதி திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த 6 நாட்களாக  காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, தாராபுரம் வட்டம் ஆலாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் இப்போராட்டம் நடைபெற்று வந்தது.  

இந்நிலையில் திங்களன்று திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருப் பூர் வருவாய் கோட்டாட்சியர், தாராபுரம் சார் ஆட்சியர் ஆகியோர் தலைமையில், கூட்டு இயக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவ சாயிகள், விவசாய சங்கத்தினர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நவம்பர் 27 ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகத்தால் முன் நுழைவு அனுமதி வழங் கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது. வழக்கின் அடுத்த கட்ட நகர்வு குறித்து, பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று பேச்சுவார்த்தையில் அரசுத் தரப் பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.  இதைத்தொடர்ந்து, ஆறாவது நாளில் காத்திருப்பு போராட்டம் முடித்துக் கொள் ளப்பட்டது. மேலும், இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த பாதிக்கப் பட்ட விவசாயிகள், ஒருங்கிணைப்பாளர் கள், விவசாய சங்க நிர்வாகிகள், கூட்டத்தில் கலந்து கொண்ட, ஆதரவு கொடுத்த பாதிக் கப்படாத விவசாயிகள், அமைப்புகள், அரசி யல்  கட்சிகள் என அனைவருக்கும் கூட்டியக் கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ள னர்.