tamilnadu

img

விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயம் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 15 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் 3 குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேற்று இரவு அருகில் உள்ள மருத்துமவனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 2 குழந்தைகள் விடுதியிலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மாதேஷ், பாபு, அத்தீஷ் ஆகிய 3 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 11 குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் விவேகானந்தா சேவாலயம் ஆர்.எஸ் எஸ் பிரமுகர் செந்தில் நாதனால் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

;