மாவீரன் பகத்சிங்கின் 113 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் பல்வேறு இடங்களில் கொடி யேற்றி, உறுதிமொழி ஏற்றனர். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஞான சேகர், மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், முன்னாள் மாநிலத் தலைவர் செ. முத்துக் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.