tamilnadu

அவிநாசியில் 10 பவுன் நகை கொள்ளை

அவிநாசி, ஏப்.27- அவிநாசி அடுத்த நியூ டவுன் பகுதியில் ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட நியூ டவுன் பகுதியில் வெங்கடாசலம் , ஜோதிலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெங்கடாசலம் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜோதிலட்சுமி அம்மாபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் வெள்ளியன்று இரவு வீட்டின் பின்புறமாக ஜன்னலை ஜோதிலட்சுமி தூய்மை செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் ஜோதிலட்சுமியை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி கொடியும், கையில் அணிந்திருந்த 5 பவுன் வளையல்கள் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

;