திருப்பத்தூர், ஜூலை 29- திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் வசிக் கும் மக்கள் மீது போடப் பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெறக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சார்பில் கடந்த 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது சார் ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை புதனன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரி கள், மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, ஜவ்வாது மலை தலைவர் லட்சுமண ராஜா, வேலூர் மாவட்ட விவசாயிகள் சங்கச் செய லாளர் சக்திவேல், நிர்வாகி கள் ஜெயன், ஜெயராமன், சுப்பிரமணி, கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் ஜவ்வாது மலையில் உள்ள வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலங்களையும், வனத்துறைக்கு சொந்தமான நிலங்களையும் சர்வே செய்து கொடுக்கவும், வரு வாய்த் துறைக்கு சொந்த மான நிலங்கள் ஜீரோ சர்வே எண் கொண்ட நிலங்களை சர்வீஸ் செய்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும், பழங்குடி மக்க ளிடம் திருப்பத்தூர் வனத் துறையினர் ரசீது போடாமல் பெறப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண் டும், மொழலை சிவன், கில னூர் லோகநாதன், செம் பரை கோவிந்தன் இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வனத்துறையிடம் மனு அளிப்பது என முடிவெடுக் கப்பட்டது.