பல் சிகிச்சைக்கு வந்த 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அறிவு பல் மருத்துவமனையில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர், மூளை தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதை அடுத்து உயிரிழந்தவர்களில் ஒருவரான இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம்குமார் தானியார் பல் மருத்துவமனை மீது ணியம்பாடி நகர காவல் நிலையம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழக முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தியது. விசாரணையில், ஒரு நோயாளிக்கு பயன்படுத்திய கருவியை தூய்மைப்படுத்தாமல், மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அறிவு பல் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.