ஆம்பூர், பிப்.18 - திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளடக்கிய ஊராட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் செல்வி சி. மாலதி, மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமார், உதவி இயக்குனர் பேரூராட்சிகள் அலுவலர் திருஞானம், ஊராட்சி கள் உதவி இயக்குனர் அருண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஊராட்சி தேர்தல் அலுவலர் புருஷோத்த மன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.