திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 6ஆவது வார்டு கஸ்பா ஏ முதல் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளதால் தூர்நாற்றம் விடுவதுடன், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.