ஆம்பூர் அருகே போர்வெல் இயந்திரம் மின்கம்பத்தில் உரசி தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அருகே குட்டகிந்தூர் கிராமத்தில் தனியார் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க சென்ற போர் வெல் எந்திரம் மின்கம்பியில் உரசியது. அப்போது ஜீப்பில் தீப்பற்றியது இந்த தீ விபத்தில் மேத்யூ என்பவர் உயிரிழந்தார் மேலும் படுகாயமடைந்த சந்தோஷ், சஞ்சய் ஆகிய இருவரும் ஆம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.