திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தொடர்ந்து சி.ஏ.ஏ, ஏன்.ஆர்.சி, ஏன்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திமுக நகரச் செயலாளர் நசீர் கான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சக்திவேல், வாணியம்பாடி தாலுகா செயலாளர் இந்துமதி, தாலுகா குழு உறுப்பினர் அர்ஜூணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.