tamilnadu

img

அருந்ததிராய் புத்தகத்தை நீக்கிய அறிவிப்பை திரும்பப் பெறுக.... சுந்தரனார் பல்கலை.யில் மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்

திருநெல்வேலி:
எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் என்ற புத்தகத்தை முதுகலை ஆங்கிலம் மூன்றாம் பருவத்திலிருந்து நீக்கிய அறிவிப்பை திரும்பப் பெற கோரி இந்திய மாணவர் சங்கத்தால் நெல்லைமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முற்றுகையிடப்பட்டது.

முற்றுகைப் போராட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை தாங்கினார். சங்க மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மத்திய குழு உறுப்பினர் சத்யா,மாநில துணை செயலாளர் பிரகாஷ், துணைத்தலைவர் அரவிந்த், செயற்குழு உறுப்பினர்காவியா, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜாய்சன், ஸ்ரீநாத், பதில் சிங், பிரிஸ்கில், மாடசாமி,வசந்த், முகேஷ், நாகராஜ், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் என்ற புத்தகம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பாடத் திட்டக் குழுவின் அனுமதியோடு மாணவர்களுக்கு பாடமாக உள்ளது.தற்பொழுது மதவாத அமைப்பின் தூண்டுதலின் பெயரில் தன்னிச்சையாக  புத்தகத்தை பாடப் பகுதியில் இருந்து நீக்கி இருப்பதுகண்டனத்துக்குரியது. மேலும் பல்கலைக் கழகத்தின் ஜனநாயத்தை சீர்குலைக்கும். எனவே உடனடியாக எழுத்தாளர் அருந்ததிராய் புத்தகத்தை நீக்கிய அறிவிப்பை திரும் பப் பெற வேண்டும். அந்த புத்தகத்தை திரும்பவும் பாட பகுதியாக சேர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.