tamilnadu

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை.... அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால்அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கிவிட்டது. இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு நிலையால்ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துவருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஞாயிறன்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. திங்களன்றும் நெல் லையில் பகலில் லேசான மழை பெய்தது.தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாகமழை பெய்தது. இதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் மொத்த உயரம்143 அடி. இதில் 88.20 அடி உயரம் தண்ணீர்உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 690 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து பாசனத்திற்காக 705 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 96.5 அடியாக உள்ளது. 118 அடிஉயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66.5 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 21. 50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடிதண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் 5 அணைகளும் சமீபத்தில் நிரம்பி வழிந்தன. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் தற்போது முக்கால் பகுதிக்கு மேல் தண்ணீர் நிரம்பி கிடக்கிறது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு: சேர்வலாறு 1, கடனா நதி 1, கருப்பாநதி 7, குண்டாறு 3, அடவிநயினார் 32, தென்காசி 2.