tamilnadu

img

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்

திருநெல்வேலி, ஏப்.21-குற்றாலம் பகுதிகளில் பெய்த மழையால் அங்கு மெயின் அருவியில் தண்ணீர் நன்றாக விழுந்தது.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடையை மிஞ்சும்வகையில் வெயில் கொளுத்தி வந்தது.இதனால் பொதுமக்கள் புழுக்கத்தில் அவதியடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக வெயிலை தணிக்கும் வகையில் மழை பெய்தது. கூடங் குளம், உவரி, திசையன்விளை, இட்டமொழி, நாங்குநேரி, ஆகிய பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய் தது. இதில் குற்றாலம் பகுதிகளில் பெய்த மழையால் அங்கு மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்நன்றாக விழுந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் அங்கு வெறும் பாறைகள் மட்டுமே தெரிந்தது குறிப்பிடத் தக்கது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

;