திருநெல்வேலி, ஆக.11- தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு திருத்தக்கூடாது, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்து வதை கைவிட வேண்டும் ,மின்சார திருத்த சட்டம் 2020 ஐ நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு, தொமுச ஐஎன்டியூசி, தேசிய மின் தொழி லாளர் சம்மேளனம் உட்பட பல்வேறு மின் வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நட வடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெருமாள்சாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் பீர் முகமது ஷா, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் நடராஜன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க நிர்வாகி தென் கரை மகாராஜன், அம்பேத்கர் எம்ப்ளா யீஸ் யூனியன் மாரிமுத்து, ஐஎன்டியுசி நல்ல துரை சார்லஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொழிற்சங்க இசக்கி ராஜன், மின் ஊழி யர் காங்கிரஸ் முத்துக்குமார், எம்ப்ளாயீஸ் பெடரேசன் ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.