திருநெல்வேலி, ஆக.25- எல்ஐசி முகவர்களின் வழிகாட்டி யான மறைந்த கோவில்பட்டி ஜெய ராமனின் நெல்லை சாதனையாளர்கள் பேரவை சார்பில் எல்.ஐ.சி முக வர்களுக்கான பயிற்சி வகுப்பு நடை பெற்றது. பாளை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பயிற்சி வகுப் பிற்கு எஸ்.குழந்தைவேலு தலைமை தாங்கினார். தொடர்ந்து மறைந்த எல்.ஐ.சி முகவர் சங்க தலைவர் ஜெய ராமனின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற எல்.ஐ.சி மண்டல மேலாளர் வி.சுப்பிரமணியன், எல்.ஐ.சி.நெல்லை கோட்ட மேலாளர் வசந்த்குமார் ஆகி யோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் எல்.ஐ.சி.முகவர் சங்க தலைவர்கள் பாலசுப்பிரமணி யன், நடராஜன், ஜேசுராஜன் , கோவில் பட்டி முருகன், தென்காசி ஹரிஹரன், தூத்துக்குடி அருள், சங்கரன்கோயில் கிளை கணேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.