திருநெல்வேலி, ஆக.18- ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என சங்க ரன்கோவிலில் நடைபெற்ற ஓய்வூ தியர்கள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கரன்கோவிலில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதி யர்கள் சங்கத்தின் 3 ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாவட்ட தலைவர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். முன்னதாக சங்க கொடியை மாநில பொதுச்செய லாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்தார். தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் என்.குமாரவேல் மாநாட்டை துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் சோ. முருகேசன் வாழ்த்திப் பேசினார். சங்க மாநில பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றி னார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக பெ.பாலுச்சாமி, செயலாளராக எஸ். குமாரசாமி, பொருளாளராக எஸ். ராஜேஸ்வரன், துணைத் தலை வர்களாக, பூ.கோபாலன், கே.எம். அபுபக்கர், எஸ்.வைகுண்டமணி, கோமதிநாயகம், இணைச்செயலா ளர்களாக எம்.பாலசுப்பிரமணியன் ஜி.துரைடேனியல், முருகன், ராஜையா ஆகியோர் மற்றும் 11 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் ஜேக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிர மணியன் மீதான சஸ்பெண்ட் உத்த ரவை நீக்கி அவருக்கான ஓய்வுகால பணப்பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும், ஓய்வூதியர் களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை பிழையில்லாமல் வழங்க வேண்டும்,சொந்த வீடு இல்லாத ஓய்வூதியர்களுக்கு அரசு வாடகை குடியிருப்புகளில் ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்கள் அனை வருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும், மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவபடி ரூ.1000 வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. சங்க மாநில செயலாளர் எஸ்.ஆறுமுகம் நிறைவுரையாற்றினார்.துரை டேனியல் நன்றி கூறினார்.