tamilnadu

நெல்லையில் காற்றாலை மூலம் 1000 மெகாவாட் உற்பத்தி

திருநெல்வேலி, மே 24-நெல்லையில் தற்போது நீர்நிலைகள் வறண்டு விட்டதால், நீர் மின்சாரம் கிடைக்கவில்லை. வெயில் காரணமாக குறைந்திருந்த காற்றாலை மின் உற்பத்தி தற்போது சற்று உயர்ந்துள்ளது காற்றாலை மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.தற்போது கோடை காலம் என்பதால் மின்நுகர்வு அதிகரித்துள்ள நிலையில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன்னதாகவே அவ்வப்போது காற்று வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவு கை கொடுக்க துவங்கியுள்ளது. ஆனால் இது நீடிக்குமா? என்பது கேள்விக்குறியே. அதே நேரத்தில் கிடைக்கும் காற்றாலை மின்சாரம் மின் நுகர்வு அளவை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இதன் காரணமாக அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சாரம்,சூரிய ஒளி மின்சாரம் போன்றவை மூலம் கிடைக்கும் மின்சாரம்போக, மேலும் தேவைக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல்செய்யப்படுகிறது. இதனால் மின்வெட்டை ஓரளவு சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர மின்வழிப்பாதை பராமரிப்பு என்ற பெயரில் வெவ்வேறு பகுதிகளில்பகல் நேரங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு செய்வதும்நெல்லையில்  நீடிக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை தொடங்கினால் 15ம் தேதிக்கு பின்னர் காற்றாலை மின் உற்பத்தி 2 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.