tamilnadu

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது குளிக்க அனுமதி இல்லை

திருநெல்வேலி, ஜூன் 3- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் ளதால், அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யது. இதைத் தொடர்ந்து நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பரவ லாக மழை பெய்து வருகிறது. செங்கோட்டையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குண்டாறு, அடவிநயினார் அணை பகுதியில் தலா 3 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக குற்றால பகுதிகளில் சாரல் மழையுடன், குளுமையான கால நிலை நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. மெயினருவியிலும், ஐந்தருவியிலும் பரவலாக தண்ணீர் விழுந்தது. கொரோனா தொற்று நோயினால் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு சில கடை கள் மட்டும் திறந்துள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் அருவிகளை பார்த்து செல்கிறார் கள். சிலர் கால்வாய்களில் குளித்து வருகிறார்கள். வழக்கமாக குற்றால சீசனையொட்டி மெயின ருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பகுதிகளில் கடை கள் அமைக்க ஏலம் விடப்படும்.

இதன் மூலம் கிடைக் கும் வருவாயை கொண்டு பேரூராட்சி சார்பில் குற்றா லத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் குற்றா லத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட் டுள்ளது. கடைகள் ஏலம் விடப்படாததால் பேரூராட்சி க்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.