tamilnadu

img

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி துவக்க நாள் கொடியேற்று விழா

 திருநெல்வேலி ,ஆக 4- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்கம் தோன்றிய நாளை முன்னிட்டு  நெல்லை டவுண் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு கொடியேற்றி வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலை வர் பி.ராஜ்குமார் தலைமை வகித் தார்,மாநில செயற்குழு உறுப்பினர் மு.பிரமநாயகம் முன்னிலை வகித் தார். மாவட்ட செயலாளர்  செ.பால் ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், மாநில செயலாளர் சோ .முருகேசன் இயக்க கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.கடமையே உயிராக கன்னியமே சாட்சியாக இயக்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயக்கத் தின் வளர்சிக்கு அயராது பாடுபடு வோம் என உறுதிமொழி எடுக்கப் பட்டது. மாவட்ட துணை செயலாளர் அந்தோணி  நன்றி கூறினார், இந் நிகழ்வில் பல்வேறு வட்டார பொ றுப்பாளர்கள் அண்ணாத்துரை, இராஜாமணி பால்ராஜ், குமார், சீனி வாசன், செண்பகராஜன்,நெல்லை யப்பன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

;