திருநெல்வேலி, மார்ச் 7- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாவட்ட ஆண்டு பேரவை வியாழக்கிழமை துவங்கியது. ஆண்டு பேரவைக்கு மாவட்டத்தலைவர் ஜீவரத்தினம் தலைமை வகித்தார். மாநா ட்டை சிஐடியு மாநிலச் செயலாளர் செண்பகம் துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை செயலாளர் சுப்பையா முன்மொழிந்தார். மாநிலத்த லைவர் சக்தி, பொதுச்செயலாளர் பிர பாகர் தேவதாஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் ஆகியோர் பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் நெல்லை மாவட்டத் தலைவராக ராஜதுரை, செயலாளராக பாலதண்டாயுதபாணி, துணைச் செயலாளராக ராஜேஸ்கந்தன், பொருளாளராக பழனிமாரியப்பன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநா ட்டில் மாநிலத் தலைவர்கள் ராமசாமி, பட்டாபிராமன், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.