திருநெல்வேலி, மே 18- மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் தென்மலை கணவாயிலிருந்து வீசும் காற்று கடந்த இரண்டு நாட்க ளாக பலமாக வீசி வருகிறது. இதனால் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் பலத்த காற்று வீசி வரு கிறது. அக்கினி நட்சத்திர வெயி லின் தாக்கம் குறைந்துள்ளது. விரைவில் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.