tamilnadu

img

மாற்று இடம் வழங்கக் கோரி சாலையோர வியாபாரிகள் மனு...

திருநெல்வேலி:
நெல்லை டவுன் சாலையோர வியாபாரிகள் வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த மாற்று இடம் கேட்டு மாநகராட்சி ஆணையரிடம் சிஐடியுநெல்லை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் மனு கொடுத்தது.இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் நாராயணன், சிஐடியு  எம்.சுடலைராஜ், சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செந்தில், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கொடுத்த மனுவில், நெல்லை டவுன் வடக்கு, கீழ ரத வீதி மற்றும் ரத வீதிகளில் தள்ளுவண்டி மற்றும் சாலையோரகடைகளில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வளையல் மற்றும் பனியன் பேன்சி பொருட்களை வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். பட்டப்படிப்பு படித்தவர் உள்ளிட்டவர்கள் சுமார் 100 குடும்பங்கள் இந்ததொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம்.

ஆகையால் எங்களதுவாழ்க்கையை உத்தரவாதப்படுத்த நயினார்குளம் கரையோரம் வடக்கு மவுண்ட்ரோடு, போத்தீஸ் கடையின் பின்புறம் உள்ள குளக்கரை ஓரம் பிளாட்பாரத்தில் மாநகராட்சி சார்பாக அங்காடி கடை அமைத்து கொடுத்து எங்களது வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.