tamilnadu

img

அசோக் படுகொலையை கண்டித்து  இன்று நெல்லையில் பொதுக்கூட்டம் 

திருநெல்வேலி:
நெல்லையில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்கின் குடும்பத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதியளிப்பு கூட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் வெள்ளியன்று (12ஆம் தேதி) பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

நெல்லை கரையிருப்பில் கடந்த மாதம் சாதி ஆதிக்க வெறியர்களால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் மு.அசோக் படுகொலை செய்யப்பட்டார் அவரின்  நினைவாக பாளை சித்த மருத்துவ கல்லூரி எதிரே உள்ள திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில்  வெள்ளியன்று (12ஆம் தேதி) மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியளிப்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு சங்கமாவட்ட செயலாளர் பி.உச்சிமாகாளி  தலைமை  தாங்குகிறார். மாவட்டத் தலைவர் மேனகா வரவேற்றுப் பேசுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், சி.பி.ஐ.எம்.எல் மாநில செயலாளர் என்.கே.நடராஜன், எஸ்.யு.சி.ஐ. மாநில செயலாளர் ரெங்கசாமி , வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகம்மது ரியாஸ், மாநில தலைவர் என்.ரெஜிஸ்குமார், மாநில செயலாளர் எஸ்.பாலா, சி.பி.எம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, பி.ராஜகுரு, எம்.சுடலைராஜ், பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன், வாலிபர் சங்க பாளை தாலுகா செயலாளர் வி.கருணா, நெல்லை தாலுகா செயலாளர் என்.கைலாஷ்  உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

;