நெல்லையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கு.பழனி, நிர்வாகிகள் மரகதம், உஷா ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், நுண் நிதி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், ஊரடங்கு நேரத்தில் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சுய உதவி குழுக்களின் பிரச்சனைகளில் தலையிட்டு விசாரணை நடத்த தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.