திருநெல்வேலி, ஆக.25- தென்காசி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி யானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை - தென்காசி ரயில்வே சாலையிலுள்ள சுப்பிரமணியபுரம் ரயில்வே பாலத்தில் ரயில் தண்டவாளத்தில் கால் துண்டான நிலை யில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே இலத்தூர் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தியதில் இறந்தது அழகப்ப புரத்தை சேர்ந்த முருகன் மகன் வசந்த குமார் (25) என்பது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.