tamilnadu

பைக்குகள் மோதி விபத்து முதியவர் பரிதாப பலி

திருநெல்வேலி, மே 31- ஊத்துமலையில் 2 பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் பரிதாபமாக இறந்தார். ஆலங்குளம் அருகே உள்ள ஊத்து மலை பவுண்ட் தெருவைச் சேர்ந்தவர் சங்கையா (67). இவர் தனது பைக்கில் ஊத்துமலைபகுதியில் சென்று கொண்டி ருந்தபோது எதிரே வந்த பைக் திடீரென மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கையா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஊத்து மலை காவல்நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.