tamilnadu

img

‘மனப்பாடத்தை கல்வியின் மையமாகக் கருதுவது சரியானதல்ல’ எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கருத்து

திருநெல்வேலி, பிப்.8- மனப்பாடம் மட்டுமே கல்வியின் மையமாகக் கருதப்படுவது சரியா னதல்ல என நெல்லை புத்தக திரு விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க த்தின் கவுரவ தலைவர் ச.தமி ழ்ச்செல்வன் பேசினார்.  பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் நெல்லை புத்தகத் திருவிழாவின் 6-வது நாள் இலக்கிய நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணை யர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.  எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், நெல்லை மாவட்ட த்தில் அறிவொளி இயக்கத் திட்ட த்தின் கீழ் கிராமம் கிராமமாகச்  செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அத்திட்டத்தில் சாமானிய மக்க ளுக்கு கற்றுக் கொடுத்ததைவிட கற்றுக் கொண்டவை மிகவும் அதிகம். கிராம மக்கள் காட்சி ரூபமா கவே சிந்திக்கிறார்கள். பொருளாதா ரம் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு  புரியாத கோணத்தில் சொல்வ தை மக்கள் கவனத்தில் கொள்வ தில்லை என்பதே உண்மை. தமிழுக்கென்று பல்வேறு பெரு மைகள் உள்ளன. சங்க காலத்தி லேயே பெண் புலவர்கள் இருந்த தும், வேற்று பகுதி நிகழ்வுகளை பட்டியலிட்டிருப்பதும் பெருமை தான். செவ்வியல் மொழியாகவும், வாழும் மொழியாகவும் தமிழ் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிற அறிவு  என்பது துறை சார்ந்து தனித்து நிற்கக் கூடாது. பல்வேறு துறைக ளுடன் இணைந்து பயணித்து சாதி க்க வைக்க வேண்டும். நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புற கலைகள் உள்ளிட்டவற்றின் கலை, நுட்பம் கல்வியில் சேர்க்கப்படாத நிலை உள்ளது. மனப்பாடம் மட்டுமே கல்வியின் மையமாக இருக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.  ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் அனுபவ திரட்சியை அடுத்த சமூக த்துக்கு கடத்துவதே சிறந்த கல்வி.  அது மனப்பாட கல்வியில் கண்டிப்பாக சாத்தியமாகாது. புத்த கங்களின் தோள்களில் ஏறிப் பார்த்தால் பிரபஞ்சத்தின் வரலாறு தெரியும். ஆகவே, புத்தகத் திருவி ழாவின் நீட்சியாக புதிய வாசகர்கள்  உருவாகியிருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் சாகித்ய அகாடமி விருதாளர் சோ.தர்மன் பேசுகை யில், நெல்லை - தூத்துக்குடி பகுதி  மக்களின் வாழ்வியலை மையப்படு த்தியே எனது படைப்புகளை அளி த்து வருகிறேன். எத்தனையோ பாரா ட்டுகள் கிடைத்தாலும், சொந்த மண்ணில் கிடைக்கும் பாராட்டுக்கு ஈடு இணையில்லை. இப் புத்தகத்  திருவிழாவில் புதிதாக எழுதுபவர்க ளையும், புத்தகம் வெளியிட விரும்பு வோரையும் ஊக்கப்படுத்தும் செயல் பாராட்டுக்குரியது. நீர் மேலா ண்மை இன்றைய காலத்தின் கட்டா யம். அதனை மையப்படுத்தியே எனது ‘சூழ்’ நாவலை எழுதினேன்.  ஆங்கிலேயரிடம் இருந்து விடு தலை பெற்ற காலத்தில் இருந்த தமி ழகத்தின் நீா்நிலைகளின் நிலை  இப்போது மிகவும் மோசமாகி யுள்ளது. நீர்நிலைகளை மீட்டெ டுக்க தேவையான முயற்சிகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றார்.