tamilnadu

சொத்து தகராறில் சித்தாப்பாவை வெட்டிக்கொலை செய்தவர் கைது

திருநெல்வேலி, ஜூன் 8- தென்காசி மாவட்டம்  செங்கோட்டை  அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தில் சொத்து தகராறில் சித்தப்பாவை அரி வாளால் வெட்டி படுகொலை செய்த வரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் போலீஸ் சரகம் காசிதர்மம் பகுதி யைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (60). அதே ஊரைச் சேர்ந்த இவரது அண்ணன்  மகன் மாடசாமி.  இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திங்க ளன்று மாலையில்  மாடசாமி, சுடலை முத்துவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் மாடசாமி ,தான் மறைத்து வைத்திருந்த அரிவா ளால் சுடலைமுத்து வை வெட்டி யுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுடலைமுத்து ரத்தவெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.  மாட சாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த அச்சன்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுடலை முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மனோகரன்  வழக்குப்பதிவு செய்து கொலை செய்து தப்பி ஓடிய மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.