திருநெல்வேலி, ஜூன் 8- நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை, கடந்த 6 மாதத் திற்கு முன்பு கூடங்குளம் இந்திரா நகர், புதுமனை பகுதி யைச் சேர்ந்த நாராயண ராஜ் என்பவர் ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து 6 மாதங் களாக தலைமறைவாகி இருந்த நாராயணராஜை, பணகுடி காவல்துறையினர் மற்றும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடு பட்டனர். தொடர்ந்து பணகுடி உதவி ஆய்வாளர் சஜீவ் மற்றும் போலீஸார் நாராயண ராஜை கையும் களவுமாக பிடி த்தனர். பின்பு வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி போக்சோ சட்டத்தின் கீழ் நாராயணன் ராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.