tamilnadu

கடலில்  மூழ்கி மீனவர் பலி

திருநெல்வேலி:
கூடங்குளம் அருகே பெருமணல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கேல்(59), மீன்பிடி தொழிலாளி, வெள்ளி அதிகாலைஇவர், அதே பகுதியைச் சேர்ந்த3 பேருடன் நாட்டுப் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். கடலில் சிறிது தூரம் சென்ற போது பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 4 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதைப் பார்த்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டனர். இதில் மிக்கேல் மட்டும் தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்தார். இதுகுறித்து கூடங்குளம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

;