tamilnadu

img

தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஆக.10- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலையை 200 நாட்க ளாக உயர்த்திட வேண்டும். கொரோனா நிவா ரணம் மாதம் ரூ.7500 வழங்க வேண்டும் உள்ளிட்டவை கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம் சிவகிரியில் காந்தி கலையரங்கம் முன்பு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் நடராஜன், ஆட்டோ சங்க மாவட்டத் துணைத்தலைவர் சக்திவேல் தலை மையிலும், மாதர் சங்க தலைவர் சுப்புலட்சுமி, செயலாளர் புஷ்பம் முன்னிலையிலும், சிவகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அமல்ராஜ், தலைமையிலும், பொன் ராஜ் முன்னிலையிலும், 7ம் திருநாள் மண்டபம் அருகில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராம சுப்பு தலைமையிலும், விவசாய சங்க செயலா ளர் வே.சுப்பிரமணியன் முன்னிலையிலும் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணன், ராமர், நல்ல தம்பி, பெரியசாமி, சுந்தரவேல், கந்தன், கல்லு கட்டிகந்தையா, குருசாமி, ஜோதிபாசு, ரவீந்திர நாத் பாரதி, குருசாமி, மருதுபாண்டியன், முத்து மாரி, உ.ராமரம்மாள், சேகர், சே.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இடைகாலில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி, ஞானபிரகாசம், குத்தா லிங்கம், புஸ்பா, முத்துலட்சுமி, கொடிகுறிச்சி, சுப்பையா, செல்லத்துரை பேசினர்.

வாசுதேவ நல்லூரில் கிராமச்சாவடி முன்பு நடந்த இயக் கத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் இரா. நடராஜன் தலைமை தாங்கினார். வி பொறுப்பா ளர் ம.மருதையா, சிஐடியு பே.மாரியப்பன். விச முருகையா, சிபிஎம் கிளைச் செயலாளர் ராஜ கோபால் ஆகியோரும், காமராஜர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் ப.சுப்பையா தலைமை தாங்கி னார். சிபிஎம் 2வது கிளைச் செயலாளர் மீனாட்சி ராஜ், புதூர் செல்வம், சே.பேர்லான் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் கடம்பன்குளம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் பி.உச்சிமாகாளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை
நெல்லை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.ராஜகுரு தலைமை தாங்கி னார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், மாவட்ட துணை தலைவர் எம்.சுடலைராஜ், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி கவு தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி செல்லத்துரை, வி.தொ.ச நிர்வாகி ராமையா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத் தில் செந்தில், மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் இதில் சாத்தான் குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுந்தர கணபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பால கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் கோரிக்கை விளக்க உரையாற்றி னர். விளாத்திகுளத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் அர்ச்சுணப்பெருமாள், சிஐடியு சார்பில் ஜோதி ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் தாலுகா செயலாளர் புவிராஜ், விவசாயிகள் சங்கம் ராம லிங்கம், சிஐடியு கூட்டுறவு சங்கம் கிருஷ்ண ராஜ், மின்சாரம் யோவான், மேல் அருணாசல புரம் ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி சிதம்பரம் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் பெருமாள் பொன்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்கம் சண்முகராஜ், சிபிஎம் மாநகரச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முத்தையாபுரம் பகுதி ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு சார்பில் ராமசாமி மணவாளன், தமிழ்நாடு விவசாய சங்கம் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓட்டப்பிடாரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் ராமமூர்த்தி ரசல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராக வன் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் பகுதி ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் சிவதாஸ் பேச்சிமுத்து, தமிழ்நாடு விவசாய சங்கம் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்கம் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காயல்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு சார்பில் சங்கரேஸ்வரன், கண பதி, சுரேஷ், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் ரவி தாகூர் ராமலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம் நம்பிராஜன் கலந்து கொண்டனர். கருங்குளம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் கண்ணன் வின்சென்ட், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணி, விவசாய தொழிலாளர் சங்கம் ஆறு முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஒன்றியம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் காசி இல்லனஸ், தமிழ்நாடு விவசாய சங்க சங்க ரன், விவசாய தொழிலாளர் சங்கம் பிரம்ம ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கயத்தார் பகுதி ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் மாரியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சீனி பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகர்ப்பகுதி ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் வேணி மோகன் தாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராமசுப்பு கலந்து கொண்டனர். கோவில்பட்டி ஒன்றியம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு சார்பில் தேவேந்திரன் சித்ரா தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். எட்டயபுரம் ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் செல்வகுமார் முருகன், தமிழ்நாடு விவசாய சங்கம் பாலமுருகன், விவசாய தொழி லாளர் சங்கம் ரவீந்திரன் கலந்து கொண்டனர். உடன்குடி ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சார்பில் கிறிஸ்டோபர் இசக்கியம்மாள், விவசாய தொழிலாளர் சங்கம் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.