tamilnadu

img

தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றாக நீக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஆக.8- தொழிலாளர் நலச் சட்டங்க ளை முற்றாக நீக்கும் நடவடிக் கையை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலி யுறுத்தி நெல்லை வண்ணார் பேட்டை தாமிரபரணி டிப்போ முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர்  எஸ்.பெருமாள், சிஐடியு மணி, ஏஐடியூசி உலகநாதன், ஜெயகுமார் எச்.எம்.எஸ். மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், டிடிஎஸ்.எப்  சந்தானம் உள்ளிட்டோர் பேசி னர். தொமுச போக்குவரத்து பிரிவு துணை பொதுச் செயலா ளரும் சிக்கன நாணய சங்க தலை வருமான மகாவிஷ்ணு நன்றி கூறினார். இதே போல் வண்ணார் பேட்டை புறவழிச்சாலை டிப்போ முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.