tamilnadu

img

சிஐடியு மூத்த தோழர் ஏ.மாடசாமி காலமானார்

திருநெல்வேலி,  அக். 23- நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சிஐடியு மூத்த தலைவர் ஏ.மாடசாமி (74)காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம், சிஐடியு ஆகியவை அஞ்சலி செலுத்தின. தோழர் ஏ.மாடசாமி சங்க ரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்  சங்கத்தின் நிர்வாகியாகவும் ,நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் நீண்ட கால  தலைவராகவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்து வந்தவர். இந்நிலையில் செவ்வாய்கிழமை அதி காலை தோழர் மாடசாமி சங்க ரன்கோவிலில் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு மூத்த தலைவர் ம.ராஜாங் கம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், முத்துபாண்டியன், சிஐடியு மாவட்ட செயலாளர்  ஆர். மோகன், மாவட்ட தலைவர் எம்.வேல்முருகன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் செண்பகம், பெருமாள், உச்சிமாகாளி, சிபிஎம் சங்க ரன்கோவில் வட்டார செய லாளர் அசோக்ராஜ் உள்ளிட் டோர் நேரில் வந்து தோழர் மாடசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தோழர் மாடசாமியின் உடல் செவ்வாய்க்கிழமை மாலையில் தகனம் செய்யப் பட்டது.  இறுதி நிகழ்ச்சியில்  கட்சி தோழர்கள், சி.ஐ.டி.யு தோழர்கள் ரத்தினம், லெட்சுமி, மாணிக்கம், தண்ட பாணி, சக்திவேல் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.