திருநெல்வேலி, மே 30- திருநெல்வேலி சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் சிஐடியு 50-ஆவது ஆண்டு பொன்விழா நிறைவு கருத்தரங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் கருத்துரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ஆர்.எஸ். செண்ப கம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வண்ணமுத்து, எஸ்.வி.பாலசுப்ரமணியன், பழனி மாரி யப்பன், பாலதண்டாயுதபாணி,ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர்.முருகன்,ராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்