tamilnadu

நெல்லை அரசு மருத்துவமனையில் ஆய்வக மருத்துவர் 2 பேருக்கு கொரோனா

திருநெல்வேலி, ஜூன் 24- நெல்லை அரசு மருத்துவமனையில் 2 பெண் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஆய்வக பரிசோதனை பிற  மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பாளை யங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்து வமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.  இந்த மருத்துவமனையில் கொ ரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்ப டும் நோயாளிகளிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, மருத்துவமனை வளா கத்தில் உள்ள ஆய்வகத்தில் பரிசோ தனை செய்யப்படுகிறது. இதுதவிர நெல்லை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள், சிறப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ப டுகிறது. அந்த மாதிரிகளும் அங்கு பரி சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறி விக்கப்பட்டு வந்தன.

இதற்காக சிறப்பு இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் பரிசோதனை பணி நடைபெற்று வரு கிறது. 2 மாதங்களுக்கு மேலாக இந்த  பணியில் ஈடுபட்டு வரும் மருத்து வர்கள், பணியாளர்கள் மற்றும் கொரோ னாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்து வர்கள், செவிலியர்கள், பணியாளர்க ளுக்கு கொரோனா தொற்று ஏற்பட வில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஆய்வக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் ஒரு பணியாளர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து ஆய்வக பணியில்  ஈடுபட்டிருந்த 2 பெண் மருத்துவர்க ளுக்கு செவ்வாயன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடி யாக அவர்கள் சிறப்பு வார்டில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி றார்கள். ஆய்வகத்தில் பரிசோதனை பணியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கான பரிசோதனை மட்டும் அங்கு மேற்கொள்ளப்படுகிறது. சோதனை சாவடி, முகாம்க ளில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகள்  தூத்துக்குடி, விருதுநகர், கன்னியா குமரி அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கொ ரோனா பரிசோதனை முடிவு கிடைப்ப தில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

;